அரசு கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம்

அர்த்தநாரீஸ்வரர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

Update: 2024-04-10 15:45 GMT

அர்த்தநாரீஸ்வரர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.


அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவ மாணவியர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயிலின் உதவி ஆணையரும் இக்கல்லூரியின் செயலருமாகிய திரு.மு. இரமணிகாந்தன் அவர்கள் தலைமை வகித்தார்.

கல்லூரி முதல்வர் முனைவர் கி.வெங்கடாசலம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். பெற்றோர்கள் மாணவ மாணவர்களின் கல்வி மேம்பாடு குறித்து அனைத்து துறை தலைவர்களிடமும், பேராசிரியர்களிடமும் கேட்டறிந்தனர்.

Tags:    

Similar News