விளாத்திகுளத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணி: மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி!

விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பான பயிற்சி நடைபெற்றது.

Update: 2024-02-17 06:02 GMT

விளாத்திகுளத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணி: மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மண்டல அலுவலர்கள், மண்டல உதவியாளர்கள், மற்றும் காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் மண்டல அலுவலர்களுக்கான பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது, மண்டல அலுவலர்களின் பணிகள் தொடர்பாக விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், தேர்தல் துணை வட்டாட்சியர் பாலமுருகன் விளக்க உரையாற்றி பயிற்சி அளித்தனர். விளாத்திகுளம் தொகுதியில் உள்ள 260 பூத்துகளுக்கும் 25 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 25 மண்டல அதிகாரிகள் 25 மண்டல உதவியாளர்கள் 25 காவல்துறை உதவி ஆய்வாளர்கள் என தேர்தல் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. நிகழ்வில் எட்டையபுரம் தேர்தல் துணை வட்டாட்சியர் சண்முகவேல் தேர்தல் உதவியாளர்கள் பாலமுருகன் ராஜ்குமார் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News