ரப்பர் தோட்டத்தில் சுடலமாக கிடந்த மத போதகர் - போலீசார் விசாரணை.

அருமனை அருகே ரப்பர் தோட்டத்திற்குள் சடலமாக கிடந்த மத போதகரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-07-01 06:55 GMT

பைல் படம் 

அருமனை அண்கோடு செம்மங்காலை சாலை உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள முல்லை ஆறு அருகே ரப்பர் தோட்டம் ஒன்றில் நேற்று காலை ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அருமனை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணமாக கிடப்பவர் யார் என விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் இடைக்கோடு பிலாவிளை பகுதியை சேர்ந்த யோனா என்பவரின் மகன் நகசோன் யோனா என்பதும், இவருக்கு ஸ்ரீஜா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளது தெரியவந்தது. மேலும் அவர் மத போதகர் ஆவார்.

அவர் அவ்வப்போது ஆலயத்திற்கு சென்று ஊழியங்கள் ஈடுபடுவது வழக்கமாக வைத்துள்ளார்.இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ஆட்டிற்கு புல் எடுக்க சென்றவர் நேற்று  காலை வரை திரும்பவில்லை. குடும்பத்தார் ஆலயத்துக்கு இவர் சென்றுள்ளதாக நினைத்தபடி இருந்துள்ளனர் என்பது தெரியவந்தது.இந்நிலையில் காலையில் முல்லை ஆறு அருகே ரப்பர் தோட்டம் ஒன்றில் பிணமாக கிடந்த தகவல் அறிந்து குடும்பத்தார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து அருமனை போலீஸ் நிலையத்தில் மனைவி புகார். அளித்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகசோன் யோனா உடலை பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News