பட்டணம் பேரூர் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு..
பட்டணம் பேரூர் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு;
By : King 24x7 Website
Update: 2024-02-03 16:51 GMT
பட்டணம் பேரூர் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு
நாமக்கல் மாவட்டம் ஆர். பட்டணம் பேரூர் கழகத்தின் சார்பாக பேரூர் கழகச் செயலாளர் கே. பாலசுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 55.வது.நினைவு தினத்தை முன்னிட்டு அண்ணா அவர்களுடைய திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து கழக நிர்வாகிகள், தொண்டர்கள் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் பேரூர் கழக பொறுப்பாளர்களும், அனைத்து வார்டு கழக பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் கழக முன்னோடிகள் என பலர் கலந்து கொண்டனர்.