50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த மயில் உயிருடன் மீட்பு

துலக்கனூரில் 50 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்த மயில் உயிருக்கு போராடிய நிலையில், தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

Update: 2024-03-05 10:19 GMT
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே துலக்கனூர் ஊராட்சியில் விவசாயி கணேசன் என்பவரது விவசாயி தோட்டத்தில் உள்ள 50 அடி ஆழமுள்ள கிணற்றில் வனப்பகுதியில் இருந்து தண்ணீர் இறைத்தேடி வந்த மயில் தவறி கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய நிலையில் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையிலான வீரர்கள் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பின் மயிலை உயிருடன் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News