ஆபத்தான முறையில் படகு சவாரி செய்த சுற்றுலாப்பயணிகளுக்கு அபராதம்

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் ஆபத்தான முறையில் படகு சவாரி செய்த வாலிபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது

Update: 2024-03-05 16:13 GMT

படகு சவாரி 

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் நகராட்சி சார்பாக படகு இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கே ஏராளமான சுற்றுலா பயணிகள் தினசரி பல்வேறு படகுகளில் சவாரி செய்கின்றனர். இதில் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு பயணம் செய்ய வேண்டுமென அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே புதுக்கோட்டை பகுதியில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் சிலர் படகுகளின் மீது ஏறி நின்று சாகசம் செய்துள்ளனர். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்களுக்கு தகவல் அளித்தனர். இதன் அடிப்படையில் விரைந்து வந்த அவர்கள் சுற்றுலா பயணிகளை எச்சரித்ததுடன் ஆபத்தான முறையில் சாகசம் செய்ததற்காக ஆயிரம் ரூபாய் அபராதம் பதித்தனர்.
Tags:    

Similar News