பழனியில் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காத வாகனத்திற்கு அபராதம்
பழனியில் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காத வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-28 12:49 GMT
அபராதம் வித்தித்த போலீசார்
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காத 30க்கும் மேற்பட்ட வாகனத்தின் உரிமை யாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.
அப்போது போலீசார் கூறியதாவது: பொதுமக்கள் விதிகளை பின்பற்றாமல் வாகனம் ஓட்டுவது கண்டிக்கத்தக்கது. ஹெல்மெட் அணிய வேண்டும். மொபைல் போன் பேசிக்கொண்டு வாகனங்களை ஓட்டக்கூடாது.
இளைஞர்கள் படு வேகமாக வாகனங்களில் செல்லக்கூடாது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மேலும் அதிக வேகமாக வாகனத்தில் செல்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.