குளம் போல் தேங்கிய நீரால் மக்கள் அவதி

Update: 2023-12-21 08:01 GMT

சுரங்க பாதையில் தேங்கிய மழைநீர் 

திண்டுக்கல் மாவட்டத்தில் ரயில் பாதை குறுக்கிடும் ரோடுகளில் மேம்பாலங்கள் உள்ளன. மேம்பாலம் இல்லாத பகுதியில் சுரங்கப்பாதை ஏற்படுத்தப்படுகிறது. இதை திட்டமிடல் இன்றி அமைத்துள்ளதால் மழைக்காலம் என்றில்லாமல் எப்போதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது . குளம் போல் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது .சுற்றுக்கிராமங்கள் வழியாக பல கி.மீ., துாரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.இதை கருத்தில் கொண்டு மழை நீர் தேக்கத்திற்கு ரயில்வே, நெடுஞ்சாலை துறை முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.என கோரிக்கை எழுந்துள்ளது.
Tags:    

Similar News