குடிநீர் வரவில்லை என பொதுமக்கள் சாலைமறியல்

சித்தளி கிராமத்தில் 15 நாட்கள் மேலாக குடிநீர் வரவில்லை என பொதுமக்கள் சாலைமறியல்

Update: 2024-01-09 08:47 GMT

சித்தளி கிராமத்தில் 15 நாட்கள் மேலாக குடிநீர் வரவில்லை என பொதுமக்கள் சாலைமறியல்

பெரம்பலூர் அருகே, சித்தளி கிராமத்தில், 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் வரவில்லை என கூறி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு. பெரம்பலூர் அருகே அரியலூர் சாலையில் உள்ள, சித்தளி கிராமத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் வரவில்லை என்றும் அப்பகுதியில் குப்பைகளை அகற்றி தூய்மை செய்யவில்லை என்றும் அடிப்படை வசதிகள் அப்பகுதியில் எதுவும் செய்யவில்லை என சித்தளி கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் பெரம்பலூர். அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது இச்சம்பவம் சம்மந்தமாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் குன்னம் தாசில்தார் மருவத்தூர் போலீசார் ஆகியோர் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியல் போராட்டத்தை கலைத்தனர்., இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News