ஏற்காடடில் பேருந்து வராததால் பொதுமக்கள் சாலை மறியல்

ஏற்காட்டில் இருந்த சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பட்டிப்பாடி நடூர் கிராமம். எந்த கிராமத்தில் இன்று காலை 7 மணி அளவில் 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-11-21 10:02 GMT

சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஏற்காட்டில் இருந்த சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பட்டிப்பாடி நடூர் கிராமம். எந்த கிராமத்தில் இன்று காலை 7 மணி அளவில் 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பட்டிப்பாடி, நடூர், கொண்டையனூர், சொனப்பாடி ஆகிய கிராமங்களுக்கு சரிவர பேருந்துகள் சொல்லவில்லை என்றும் இதனால் பள்ளி குழந்தைகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் செல்ல முடியாமல் அவதிக்குள்ளவாதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும் பேருந்த சரிவர வராததால் ஆபத்தான பயத்தை மேற்கொள்ளும் சூழல் நிலவுவதாகவும் அவர்கள் உயிரை பணயம் வைத்து பேருந்தில் பயணம் செய்வதாகவும் புகார் கூறியுள்ளனர். இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் மோகன் ஊர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் வியாழன் கிழமை முதல் பேருந்துகள் சரிவர வரும் எனவும் உத்திரவாதம் அளித்ததன் பேரில் அங்கிருந்து கலைந்து சென்றனர். சுமார் 2மணி நேர போராட்டத்தால் கொண்டையனூர் சொனப்பாடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News