விருதுநகர் எஸ்பி அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்

விருதுநகர் எஸ்பி அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-05-09 03:21 GMT

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரத்தின் ஒரு நாள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த 17 பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர் அதேபோல் இரண்டு காவலர்களும் தங்களுடைய குறைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர் மனுவை பெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனுவை வழங்கிய அவர் விரைந்து முடிக்க கூறி உத்தரவிட்டார்

Tags:    

Similar News