தெரு நாய் தொல்லையால் ஆலங்குளம் மக்கள் அவதி

தெரு நாய் தொல்லையால் பொதுமக்கள் அவதிக்குள்ளகினர்.

Update: 2024-05-07 08:46 GMT
தெரு நாய் தொல்லையால் ஆலங்குளம் மக்கள் அவதி

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பெருகி வரும் தெரு நாய் தொல்லையால் மக்கள் அவதியடைந்துள்ளனா். ஆலங்குளம் பேரூராட்சிக்குள்பட்ட 15 வாா்டுகளிலும் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நாய்க்கடியால் ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு ஆலங்குளம் பேரூராட்சிப் பகுதியில் இருந்து வாரம் இரு நபராவது சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா். நாய்களின் பெருக்கத்தால், பொதுமக்கள் அச்சத்துடனேயே வீட்டை விட்டு வெளியே வர வேண்டிய சூழல் நிலவுகிறது. இ

வற்றைக் கட்டுப்படுத்த பேரூராட்சி நிா்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Tags:    

Similar News