மயிலாடுதுறை மக்கள் குறைதீர் முகாமில் 344 மனுக்கள் அளித்த பொதுமக்கள்

மக்கள் அளித்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் உத்தரவு;

Update: 2024-02-26 19:30 GMT

மக்கள் குறைதீர் கூட்டம்

மயிலாடுதுறையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது.

மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகைபுரிந்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனுக்களை அளித்தனர். இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டாமாறுதல், கோரி 59 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 42 மனுக்களும், முதியோர், மாற்றுத்திறனாளிகள், மற்றும் விதவை உதவித்தொகைகோரி 47 மனுக்களும், புகார் தொடர்பான மனுக்கள் 52 மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவிதொகை, வங்கிகடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள் கோரி 24 மனுக்களும், அடிப்படை வசதி கோரி 39 மனுக்களும், நிலஅபகரிப்பு தொடர்பாக 26 மனுக்களும் கலைஞர் உரிமைத்தொகை வேண்டி 43 மனுக்களும் தொழிற்கடன் வழங்க கோரி 12 மனுக்களும் மொத்தம் 344 மனுக்கள் பெறப்பட்டன.

Advertisement

இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்கவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை, தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி) .இரா.கீதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக தனலெட்சுமி, மற்றும் மாவட்ட பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் . பு. ரவி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் டீ. சுரேஷ் மற்றும் சீர்காழி வருவாய் கோட்ட அலுவலர் தக்ஷஉ.அர்ச்சனா, மற்றும் அனைத்துதுறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News