தெரு நாய்களின் தொல்லையால் அச்சத்தில் உறையும் பொதுமக்கள்

தெரு நாய்களை நகராட்சி நிர்வாகம் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.

Update: 2024-02-29 12:05 GMT

தெருநாய்களால் அச்சம்

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கூட்டமாக சுற்றித் திரியும் தெருநாய்கள் தொல்லை இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

பெரியகுளம் நகராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் தினமும் வீட்டை விட்டு வெளியில் செல்லும் நேரத்தில் தெருக்களில் கூட்டம் கூட்டமாக காணப்படும் தெரு நாய்களை கண்டு அச்சத்துடனே நடமாடி வருகின்றனர். மேலும் பகலில் நாயின் தொல்லையை சமாளித்தாலும், இரவில் நாய்களின் தொல்லை அதிகம் காணப்படுகிறது.

பெரியகுளம் நகர் முழுவதும் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள் திடீரென சண்டை போடுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் இரவில் தனியாக செல்லும் நபர்களை நாய்கள் துரத்தும் நிலை ஏற்படுவதால் இரவில் செல்லும் மக்கள் மிகுந்த அச்சத்துடன் செல்லவேண்டிய நிலையில் உள்ளனர்.கடந்த ஆண்டு நகராட்சி நிர்வாகம் தெருக்களில் திரியும் நாய்களை பிடித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்நிலையில் மீண்டும் சமீப காலமாக பெரியகுளத்தில் அதிகரித்து வரும் தெரு நாய்கள் கூட்டத்தை கட்டுபடுத்த பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரியகுளம் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News