நீடிக்கும் பனிப்பொழிவு; வாகன ஓட்டிகள் அவதி

சிவகங்கையில் ஆங்காங்கே காலை 9 மணி வரை பனிமூட்டம் காணப்படுவதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

Update: 2023-12-25 15:55 GMT

 சிவகங்கையில் ஆங்காங்கே காலை 9 மணி வரை பனிமூட்டம் காணப்படுவதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில், வானம் மேகமூட்டத்துடனும் காணப்பட்டு வந்தது. இந்நிலையில், மார்கழி மாதம் பிறந்ததிலிருந்து மாவட்டம் முழுவதிலும் குளிர்ச்சியான சீதோஷன நிலை நிலவி வரும் நிலையில், இன்று அதிகாலை முதல் சிவகங்கையில் ரயில் நிலையம், பேருந்து நிலையம், அரண்மனை வாசல், மதுரை முக்கு உட்பட நகர் முழுவதும் மிகுதியான பனிமூட்டம் காணப்பட்டது. சூரியன் உதித்த நிலையிலும் காலை 9 மணி வரை பனிமூட்டம் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தாலும், எப்பொழுதாவது அதிசயமாக நடக்கும் இது போன்ற பனி மூட்டத்தை சிவகங்கை நகர் மக்கள் ஆவலுடன் கண்டு ரசித்தனர்
Tags:    

Similar News