டூவீலரில் சென்றவர் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து

கடம்பன்குறிச்சியை சேர்ந்த தர்மதுரை டாஸ்மாக் அருகே டூவீலரில் சென்றபோது, நிலை தடுமாறி கீழே விழுந்ததால் பலத்த காயம் உண்டானது.;

Update: 2024-04-12 14:57 GMT

  கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகா, கடம்பன்குறிச்சி, வாய்க்கால் மேடு பகுதியைச் சேர்ந்தவர் தர்மதுரை வயது 32. இவர் ஏப்ரல் 9-ம் தேதி இரவு 9 மணி அளவில், தளவாய் பாளையத்திலிருந்து வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில், அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் அய்யம்பாளையம் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடை அருகே சென்றபோது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது .

Advertisement

இந்த விபத்தில் தர்மதுரைக்கு தலை மற்றும் காது பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தர்மதுரையின் தாயார் செல்வி வயது 55 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக டூவீலரை கவன குறைவாக ஓட்டி, விபத்து ஏற்பட காரணமான தர்மதுரை மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.

Tags:    

Similar News