புகையிலை பொருட்களை விற்பனை செய்தவர் கைது
By : King 24X7 News (B)
Update: 2023-10-25 14:52 GMT
கைது செய்யப்பட்டவர்
அரியலூர் நகர காவல்துறையினர் இன்று தடை செய்யபட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யபடுகிறதா என ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் கோவிந்தபுரம் கிராமத்தில் ரமேஷ் என்பவர் அவரது மளிகை கடையில் தடை செய்யபட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த ஹான்ஸ், கூல்லிப், விமல் பான் மசாலா உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்