பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா

விழுப்புரம் மாவட்டம், குளம்பட்டு பகுதியில் பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-06-23 09:38 GMT

பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா

விழுப்புரம் மாவட்டம்,கிளியனார் அடுத்த குமளம்பட்டு கிராமத்தில் பேசும் பெருமாள் என்றழைக்கப்படும் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் 3ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

தொடர்ந்து, தினமும் இரவு 7;00 மணிக்கு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது.நேற்று 21ம் தேதி அனுமந் வாகனத்தில் வீதியுலா நடந்தது. இன்று 22ம் தேதி யானை வாகனத்திலும், நாளை 23ம் தேதி இரவு 7:00 மணிக்கு பல்லக்கு வீதியுலா நடக்கிறது.வரும் 25ம் தேதி திருத்தேர் விழா நடக்கிறது.

27ம் தேதி தீர்த்தவாரி திருக்கல்யாணம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் குழுவினர் மற்றும் விழா அமைப்பாளர்கள் செய்துள்ளனர்.

Tags:    

Similar News