வெளிநாட்டில் உடல் நலம் பாதிக்கப்பட்ட மனைவியை மீட்டு தரக்கோரி மனு

குவைத் நாட்டில் உடல் நிலை பாதிக்கப்பட்டு, வீட்டு உரிமையாளரால் மோசமாக நடத்தப்படும் தனது மீட்டு தர கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவரது கணவர் மனு அளித்தார்.

Update: 2024-01-03 03:48 GMT
மனு அளிக்க வந்தவர்கள் 
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே செம்மங்குடி கிராமத்தில் வசித்து வருபவர் ஸ்ரீகாந்த். இவருக்கு மனைவி கீதா மற்றும் மகன், மகள் உள்ளனர் .ஸ்ரீகாந்தின் மனைவி கீதா கடந்த 2022 ஆம் ஆண்டு குவைத் நாட்டிற்கு வீட்டு வேலைக்காக சென்றுள்ளார். தற்போது கீதா வீட்டு வேலைக்காக சென்று பணிபுரிந்து வரும் நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும், கீதாவை வேலை பார்க்கும் வீட்டின் உரிமையாளர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்காமல் கொடுமைப்படுத்தி வருவதாகவும், கீதாவை 20 நாட்களுக்கும் மேலாக தனி அறையில் அடைத்து வைத்திருப்பதாகவும் உடனடியாக தமிழக அரசு காப்பாற்ற வேண்டும் எனவும் வீடியோ பதிவு செய்து அவரது சகோதரி சங்கீதா என்பவருக்கு அனுப்பியுள்ளார். இந்நிலையில் கீதாவை மீட்டு தர வேண்டி கணவர் ஸ்ரீகாந்த், மகள் மற்றும் உறவினர்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
Tags:    

Similar News