பூரண மதுவிலக்கு வேண்டி ஆட்சியர் அலுவலகத்தில் மனு
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2023-11-21 15:35 GMT
ஆட்சியர் அலுவலகத்தில் மனு
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் சிவகங்கை ஆட்சியர் ஆஷா அஜித்திடம் மனு அளித்தனர். இதில் மாவட்ட செயலாளர் சுரேஷ், தலைவர் ரிச்சர்ட் பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன், நகர செயலாளர் ராஜசேகர், இளையான்குடி ஒன்றிய இணைச் செயலாளர் கலைவாணன் ஆகியோர் பங்கேற்றனர்