ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட கோரி மனு கொடுக்கும் போராட்டம்
எலச்சிபாளையத்தில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.;
Update: 2023-12-21 10:06 GMT
ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடக்கோரி, எலச்சிபாளையம் மின்வாரிய அலுவலகம் முன்பாக, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில், ஆர்பாட்டம் நடந்தது. நாடுமுழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை மத்திய அரசு அமுல்படுத்தி வருகின்றது. இதனால், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் மற்றும் விசைத்தறிகளுக்கு வழங்கப்படும் மானிய மின்சாரம் தடைபடும். சிறு, குறு தொழில் செய்வோர், பொதுமக்கள், தோட்டம் வைத்திருப்பவர்கள் மிகவும் பாதிக்கப்படுவர். பெட்ரோல், டீசல், கேஸ் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையேற்றம்போல், மின்சார கட்டணமும் அடிக்கடி உயர்ந்துகொண்டே போகும் அபாயம் உள்ளது. எனவே, இத்திட்டத்தை தமிழகத்தில் அமுல்படுத்த கூடாது என வலியுறுத்தி நேற்று, எலச்சிபாளையம் மின்சார வாரியம் அலுவலகம் முன்பாக, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தலைமையில், மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ், கிழக்கு ஒன்றிய செயலாளர் தேவராஜன், ஒன்றியகுழு உறுப்பினர்கள் ரமேஷ், ஈஸ்வரன், ஏளூர் வார்டு உறுப்பினர் ஜோதிமணி உட்பட பலர் கலந்துகொண்டனர். இறுதியில், நிர்வாகி மாதேஸ் நன்றியுரையாற்றினார்.