தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு சிலை வைக்க கோரி மனு

மதுராந்தகத்தில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு சிலை அமைக்க இடம் வழங்க கோரி தேமுதிகவினர் நகராட்சி ஆணையர் மற்றும் தலைவரிடம் மனு அளித்தனர்.

Update: 2024-01-07 05:10 GMT
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிலை வைக்க கோரி மனு

செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் தேசிய முற்போக்கு திராவிட கழகம் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் ராஜேந்திரன் தலைமையில், மறைந்த தே. மு. தி. க முன்னாள் தலைவர் விஜயகாந்த்க்கு உருவ சிலை வைக்க இடம் கோரி மதுராந்தகம் நகராட்சி ஆணையர் பொறுப்பு விஜயகுமார் மற்றும் நகர மன்ற தலைவர் மலர்விழிகுமார் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மதுராந்தகம் நகர தே. மு. தி. க நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்


Tags:    

Similar News