மேயரிடம் மனு அளித்த நலச்சங்க நிர்வாகிகள்
திருநெல்வேலி மாநகராட்சி 52வது வார்டில் கதீஜா கார்டன் குடியிருப்பு பகுதியில் ஜோன் சி பதிக்க வேண்டும் என அன்னை கதிஜா குடியிருப்பு நலசங்கத்தினர் மேயரிடம் மனு அளித்துள்ளனர்.;
Update: 2024-02-21 01:34 GMT
மேயரிடம் மனு அளித்த போது
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 52வது வார்டுக்கு உட்பட்ட அன்னை கதீஜா கார்டன் குடியிருப்பு பகுதி ஜோன் 'ஏ' பதியப்பட்டுள்ளது. அதனை ஜோன் 'சி' மாற்றம் செய்ய வேண்டும் என நேற்று நடைபெற்ற மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மேயரிடம் அன்னை கதிஜா கார்டன் குடியிருப்பு நலச்சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர்.இந்த நிகழ்வின் போது எஸ்டிபிஐ கட்சியின் பொதுச்செயலாளர் கனி, நலச்சங்க தலைவர் கமால்தீன், பொருளாளர் அப்துல் காதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.