அகில பாரதிய சந்தியாசிகள் சங்கம் சார்பில் யாத்திரை வரவேற்பு நிகழ்சி

மல்லசமுத்திரத்தில் திருமணிமுத்தாறு பாதுகாப்பு இயக்கம் மற்றும் அகில பாரதிய சந்தியாசிகள் சங்கம் சார்பில் யாத்திரை வரவேற்பு நிகழ்சி நடந்தது.

Update: 2024-02-21 11:55 GMT

யாத்திரை வரவேற்பு நிகழ்சி 

காவிரி நதியில் துணைநதியான திருமணிமுத்தாறு நதியை தூய்மையாக்கி பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் திருமணிமுத்தாறு பாதுகாப்பு இயக்கம் மற்றும் அகில பாரதிய சந்தியாசிகள் சங்கம் சார்பில், கடந்த 8 ம்தேதி சேலம் சேர்வராயன்மலை ஏற்காட்டில் தொடங்கி, இன்று [22] பரமத்திவேலூர் வரையில் 16நாட்கள் யாத்திரை வரவேற்பு விழா நடந்துவருகின்றது. அதன்படி நேற்றுமுன்தினம் மல்லசமுத்திரம் வந்தடைந்த இக்குழுவிற்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெரியமாரியம்மன் கோவிலில் அம்மனுக்க சிறப்பு அபிசேக ஆராதனை செய்தனர். தொடர்ந்து, வையப்பமலை, எலச்சிபாளையம் என பல்வேறு பகுதிகளில் மக்கள் வரவேற்றனர். முன்னதாக, எலச்சிபாளையம் திருமணிமுத்தாற்றில் தீபாராதனை செய்து வழிபட்டனர்.
Tags:    

Similar News