உலக பல்லுயிர் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

விருதுநகரில் ஆலமரம் அமைப்பின் சார்பில் உலக பல்லுயிர் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது

Update: 2024-05-23 02:05 GMT
உலக பல்வேறு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது

உலக பல்லுயிர் தினத்தை முன்னிட்டு ஆலமரம் அமைப்பின் சார்பாக 300 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. விருதுநகர் துணை கண்காணிப்பாளர் சரகத்திற்கு உட்பட்ட9 காவல் நிலையம், துணைக்கண்காணிப்பாளர் அலுவலக வளாகம் மற்றும் வரலொட்டி ஊராட்சி பகுதியிலும் மாவட்ட பதிவாளர் அலுவலக வளாகத்திலும் மரக்கன்றுகள் நடப்பட்டன இந்த நிகழ்வில் விருதுநகர் காவல் துணைக்கண்காணிப்பாளர் பவித்ரா ஆலமரம் அமைப்பின் தலைவர் ரவீந்திரன் வரலொட்டி ஊராட்சி தலைவர் திருப்பதி மற்றும் ஆலமரம் அமைப்பின் முன்னனி விழுதுகள் எட்வர்ட் வீரபாண்டி மணி சுரேஷ்குமார் பங்கேற்றனர் நிகழ்வு ஒருங்கிணைப்பை ஆலமரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆலமரம் கோ புஷ்பராஜ் சிறப்பாக ஏற்பாடுகள் செய்து நடைபெற்றது.

Tags:    

Similar News