மாநகராட்சி பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

Update: 2023-11-09 11:34 GMT

மரக்கன்று நடல்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தூத்துக்குடியில் ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்கப்பட்ட இடத்தில் மரக்கன்று நடும் பணி செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கியது. தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் அரசுக்குச் சொந்தமான இடங்களைஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, புஷ்பா நகா் பகுதியில் மீட்கப்பட்ட இடத்தில் மரக்கன்று நடும் பணியை மேயா் ஜெகன் பெரியசாமி தொடக்கிவைத்தாா்.

முன்னதாக, கனமழை காரணமாக மாநகரின் பல்வேறு இடங்களில் தேங்கிய நீரை அப்புறப்படுத்தும் பணியை மேயா் பாா்வையிட்டு, விரைவுபடுத்தினாா். இதில், மாநகராட்சி ஆணையா் தினேஷ்குமாா், வட்டச் செயலா் ரவீந்திரன், அதிகாரிகள், அலுவலா்கள், ஊழியா்கள் பங்கேற்றனா்.

Tags:    

Similar News