மகாத்மா காந்தி நினைவு நாளில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி

தொட்டியபட்டியில்,மகாத்மா காந்தி நினைவு நாளில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி.

Update: 2024-01-30 10:32 GMT
தொட்டியபட்டி அரசு பள்ளியில்,மகாத்மா காந்தி நினைவு நாளில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி. ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்திய சுதந்திர போராட்டத்தை முன்னெடுத்து, இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்று தந்த அண்ணல் மகாத்மா காந்தி நினைவு தினம் இன்று. இந்த நாளை,தமிழக அரசு "தீண்டாமை ஒழிப்பு"நாளாக கடைபிடிக்க கூறிய வழிகாட்டுதலின்படி, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி இன்று நாடெங்கும் மேற்கொள்ளப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, கரூர் மாவட்டம்,க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, தொட்டியப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. பள்ளி வளாகத்தில், பள்ளியின் தலைமை ஆசிரியர் கோ.மூர்த்தி தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை வாசிக்க, அதனை தொடர்ந்து மாணாக்கர்கள் உறுதிமொழியை ஏற்றனர்.
Tags:    

Similar News