காந்தி நினைவு நாளில் உறுதிமொழி ஏற்பு

காந்தி நினைவு நாளையொட்டி  அன்னதானம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்வுகள் நடைபெற்றது.

Update: 2024-01-31 05:57 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளியில் மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தலைமையாசிரியை செல்வி தீண்டாமை உறுதிமொழி வாசிக்க மாணவ, மாணவியர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மகாத்மா காந்தி சமூக சேவை மையம் சார்பில் காந்தி நினைவு நாளையொட்டி எதிர்மேடு அன்னை ஆதரவற்றோர் மையத்தில் அமைப்பாளர் காந்தி நாச்சிமுத்து தலைமையில் மூன்று வேளை உணவு கொடுக்கப்பட்டது. அன்னை மைய நிறுவனர் ஹேமமாலினி இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
Tags:    

Similar News