நாகப்பட்டினம் : கொத்தடிமை ஒழிப்பு உறுதிமொழி

நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பாக கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-02-09 13:24 GMT

கொத்தடிமை ஒழிப்பு உறுதிமொழி 

நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பாக கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி, மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9 ஆம் நாள் கொத்தடிமை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை அடுத்து நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஹர்ஷ் சிங் இ. கா. ப அவர்களின் முன்னிலையில் நாகை மாவட்ட காவல்துறையினர் மற்றும் நாகை மாவட்ட அமைச்சுப் பணியாளர்கள் அனைவரும் பின்வரும் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் உறுதிமொழியை ஏற்றுகொண்டனர்.

கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதி மொழிய இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி மனிதனை வணிகப் பொருளாக்குதலும், வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் வழக்கங்களும், கடன் பிணையத் தொகை வழங்கி கட்டாயப் பணிக்கு வற்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாக வரையறை செய்யப்பட்டுள்ளதால், கொத்தடிமைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தை கருத்திற் கொண்டு சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், கொத்தடிமைத் தொழிலாளர் முறை எந்தத் தொழிலில் இருந்தாலும் நடவடிக்கை எடுக்க முழு அதனை அடையாளங்கண்டு தக்க முயற்சி செய்வேன் என்றும்,

எந்தத் தொழிற்சாலையிலும் தொழிலாளர்களுக்கு முன்பணம் கொடுத்து பணியமர்த்துவதைத் தவிர்க்க வலியுறுத்துவேன் என்றும், கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களின் முழுமையான மறுவாழ்விற்காகப் பணியாற்றுவேன் என்றும், இந்திய அரசமைப்புச் சட்டம் வகை செய்துள்ள அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் உரித்தாக்குவதற்கு, கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டத்தைச் சீரிய முறையில் செயற்படுத்த உறுதுணையாக இருந்து கொத்தடிமைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு சிறப்புடன் செயற்படுவேன் என்றும், நான் உளமார உறுதி கூறுகிறேன்.

Tags:    

Similar News