எடப்பாடி: சாலையோர கடைகளில் பாமகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு

தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அண்ணாதுரைக்கு மாம்பழம் சின்னத்தில் ஓட்டு கேட்டு கூட்டணி கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் எடப்பாடி பஸ் நிலையம், ரோட்டோர கடைகள் மற்றும், பொது மக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்...

Update: 2024-03-31 01:46 GMT

வாக்கு சேகரிப்பு 

2024 நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் 19 நாட்கள் உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.  அதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எடப்பாடி பஸ் நிலையம் அதன் சுற்று  பகுதியில் உள்ள ரோட்டோர கடைகள் மற்றும் ஆட்டோ ஸ்டாண்ட், பொதுமக்களிடையே  பாட்டாளி மக்கள் கட்சியின் எடப்பாடி நகர செயலாளர் சண்முகம் தலைமையில் கூட்டணி கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி மாம்பழ சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.  அப்போது பாஜக நகரச் செயலாளர் சந்திரன்  மற்றும் நகர பொறுப்பாளர்கள் பாமக,அமமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு மாம்பழச் சினத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்

Tags:    

Similar News