மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்

பள்ளி, கல்லூரி மாணவர்களின் தனித்திறனை வளர்க்கும் வகையில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், தஞ்சாவூரில் வரும் 9ம் தேதி கட்டுரை, பேச்சுப் போட்டி நடக்கிறது.

Update: 2023-12-27 12:19 GMT
தஞ்சாவூர் ஆட்சியர் தீபக் ஜேக்கப்

தமிழ்நாட்டிலுள்ள 11, 12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில், ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், மாவட்டம் வாரியாக கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பெற்று பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. நிகழாண்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 ,12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளை 09.01.2024 ஆம் (செவ்வாய்க்கிழமை) தேதியன்றும், கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளை 10.01.2024 ஆம் (புதன்கிழமை) தேதியன்றும், தஞ்சாவூர் மாவட்டம் அரசர் மேல்நிலைப் பள்ளியில் காலை 9.30 மணி முதல் நடைபெறவுள்ளன. 

இப்போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்வதற்குரிய படிவத்தை நிறைவு செய்து தலைமையாசிரியர், முதல்வர், துறைத் தலைவரின் பரிந்துரையுடன் போட்டி தொடங்கும் முன்பு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் அளிக்க வேண்டும்.   ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரியிலிருந்தும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் ஒவ்வொரு போட்டிக்கும் ஒருவர் வீதம் மொத்தம் 3 மாணவர்கள் மட்டும் கலந்துகொள்ளலாம். போட்டிகளுக்குரிய தலைப்புகள் போட்டி தொடங்குவதற்கு முன்னர் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும். ஒவ்வொரு போட்டிக்கும் முதல்பரிசு ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.7 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தப் பரிசுத் தொகையாக ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் காசோலையாக வழங்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News