விஷமருந்தி விவசாயி தற்கொலை!

ஆலங்குடி அருகே விஷமருந்தி விவசாயி தற்கொலை செய்துக்கொண்டார்.

Update: 2024-07-03 09:01 GMT

புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே மேற்பனைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜாமணி (57). விவசாயி. இவர் கடந்த 1ஆம் தேதி வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Tags:    

Similar News