தர்மபுரி மாவட்ட மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-12-31 12:09 GMT

எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம்

இன்று இரவு தர்மபுரி மாவட்ட தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, தெருக்களில் பைக் ரேஸ் மற்றும் பைக்கில் சுற்றுவதை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும். மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டை மீறி, பட்டாசு வெடித்தாலோ, பைக் ரேஸ் ஓட்டினாலோ, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Tags:    

Similar News