மர்மமான முறையில் உயிரிழந்த ஓட்டுனர்-போலீசார் விசாரணை
அரியலூர் அருகே மர்மமான முறையில் ஓட்டுநர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.;
Update: 2023-10-28 04:45 GMT
அரியலூர் காவல்நிலையம்
சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் மணி. ஓட்டுனரான இவர் அரியலூர் மாவட்டம் தாமரைக்குளம் கிராமத்திலுள்ள ராம்கோ சிமெண்ட் ஆலையில் சிமெண்ட் லோடு ஏற்றும் பகுதியில் லாரியிலேயே மர்மமான முறையில் மயங்கி கிடந்துள்ளார். இதனை கண்ட மற்றொரு லாரி ஒட்டுனர் பெருமாள் என்பவர் சிமெண்ட் ஆலை காவலாளிக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை கொண்டு சென்றபோது மணியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்நிலையில் அரியலூர் நகர காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.