பெண்ணை தாக்கியவர் அதிரடி கைது !

பழவூர் அருகே பெண்ணை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-03-15 06:01 GMT

காவல் துறை

நெல்லை மாவட்டம் பழவூர் அருகேஉள்ள பொன்னார்குளத்தை சேர்ந்த செல்வியிடம் அதே ஊரை சேர்ந்த செல்வகுமார் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று செல்வி தனது வீட்டின் முன்பு நின்றபோது அங்கு வந்த செல்வகுமார் அவரை அவதூறாக பேசி ஆயுதத்தால் தாக்கி ரத்த காயம் ஏற்படுத்தி மிரட்டியுள்ளார். இதுகுறித்து செல்வி அளித்த புகாரின் பேரில் பழுவூர் போலீசார் செல்வகுமாரை இன்று (மார்ச் 15) கைது செய்தனர்.
Tags:    

Similar News