இன்ஸ்பெக்டரை கௌரவித்த போலீஸ் எஸ்.பி,

ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் பணி ஓய்வு பெறும் சிறப்பு சார்பு ஆய்வாளர் பூர்ண சந்திரனை, போலீஸ் எஸ்.பி, சீனிவாச பெருமாள் கௌரவித்தார்.

Update: 2023-12-29 15:49 GMT
பணி ஓய்வு பெறும் சிறப்பு சார்பு ஆய்வாளரை கௌரவித்த எஸ் பி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணி புரிபவர் பூர்ண சந்திரன். இவர் தனது குடும்ப சூழ்நிலை காரணமாக விருப்ப ஓய்வு கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் பூர்ண சந்திரன்க்கு விருப்ப ஓய்வு வழங்க உத்தரவிட்டார். விருப்ப ஓய்வு பெறும் சிறப்பு ஆய்வாளர் பூர்ண சந்திரளை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து அவர் செய்த பணிகளை பாராட்டி சால்வை அணிவித்து சான்றிதழ்களை வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் பாராட்டுகளை தெரிவித்து கௌரவித்தார்.
Tags:    

Similar News