புதிய சட்டங்கள் குறித்து போலீசாருக்கு பயிற்சி

ராணிப்பேட்டை எஸ்பி அலுவலகத்தில் புதிய சட்டங்கள் குறித்த பயிற்சி போலீசாருக்கு வழங்கப்பட்டது.

Update: 2024-05-14 07:40 GMT

பயிற்சி வகுப்பு 

ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் புதிய குற்றவியல் சட்டங்களான பாரதீய நியாய சன்கிதா, பாரதீய நாகரிக் சுரக்க்ஷா சன்கிதா மற்றும் பாரதீய சாக்‌ஷியா அதிநியாயம் ஆகிய சட்டங்கள் ஜூலை மாதம் முதல் அமலுக்கு வருவதால் அது குறித்து போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட எஸ்பி கிரண் ஸ்ருதி தலைமை தாங்கினார்.புதிய சட்டங்கள் குறித்து இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மனோகரன், மோகன்ராஜ் ஆகியோர் பயிற்சி அளித்தனர். பயிற்சியில் போலீசார் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News