அருப்புக்கோட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து செலுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

Update: 2024-03-03 15:51 GMT
போலியோ சொட்டு மருந்து முகாம் 

தமிழகம் முழுவதும் இன்று ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து செலுத்தும் பணி நடைபெற்றது நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் போலியோ சொட்டு மருந்து செலுத்தும் பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.

பெரியவள்ளி குளம், துணை சுகாதார நிலையத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன்,இ.ஆ.ப., நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.

Tags:    

Similar News