பொங்கல் விழா கொண்டாட்டம்

மேட்டூர் அருகே வனவாசி அரசு தொழில்நுட்ப கல்லூரியில் சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் மற்றும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2024-01-12 15:07 GMT

மேட்டூர் அருகே வனவாசி அரசு தொழில்நுட்ப கல்லூரியில் சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் மற்றும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

மேட்டூர் அருகே வனவாசியில் அரசு தொழில்நுட்ப கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் இன்று சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய அரசு நேரு யுவகேந்திரா, அரசு தொழில்நுட்ப கல்லூரி மற்றும் நாட்டு நலப் பணி திட்டம் இணைந்து தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது.

கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு,போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் வண்ண கோலமிட்டு மாணவ மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடினர்.நிகழ்ச்சியில்  கல்லூரி முதல்வர்  துணைஜெகதீசன், துணை முதல்வர் முருகேசன் உள்பட ஏராளமானோர் ஒரு கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News