கெங்கவல்லி பொங்கல் பரிசு வழங்கல்

சேலம் மாவட்டம், கெங்கவல்லியில் அரசு சார்ப்பில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-01-11 09:00 GMT

சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம் ,கெங்கவல்லியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சியானது இன்று கெங்கவல்லி பேரூராட்சியில் உள்ள 11 வது வார்டு நடுவீதி நியாய விலை கடையில் கெங்கவல்லி பேரூராட்சி மன்ற தலைவர் சு லோகாம்பாள், வட்டாட்சியர் பாலாஜி,பேரூர் கழக செயலாளர் சு. பாலமுருகன் கூட்டுறவு செயலாட்சியர் வசந்தம் தங்கராசு தலைமையில் பொது மக்களுக்கு வழங்கபட்டது. 

இந்நிகழ்வில், துணைத் தலைவர் மருகாம்பாள் நாகராஜ் கவுன்சிலர்கள் லதா மணிவேல் முருகேசன், அருண்குமார், தங்கபாண்டியன், சையது, ஹம்சவர்தினி குமார்,சத்யா செந்தில் கவிதா சேகர், கலியம்மாள், அமுதா கிருஷ்ணமூர்த்தி, வகிதா பானு முஜிபுர் ரஹ்மான், மற்றும் கழக நிர்வாகிகள் வ. ராமசாமி, நசீர், மூர்த்தி ,ஜவகர் மணி ,பாலசுப்ரமணியம், செல்வகிளிண்டன், முருகேசன்,ராஜேந்திரன் , ஆரோக்கியசாமி,தனசேகர், வெங்கடேஷ் , பிரவீன்,மணிகண்டன்,மனோஜ், முகேஷ் மற்றும் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News