பெயர் பலகைகளில் போஸ்டர்: வாகன ஓட்டிகள் அவதி
பெயர் பலகைகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
By : King 24X7 News (B)
Update: 2023-12-18 10:52 GMT
திண்டுக்கல் மாவட்டத்தில் நான்குவழிச்சாலை, மாநில நெடுஞ்சாலை, கிராமப்புற மாவட்ட இதர சாலைகள் என அனைத்து ரோடுகளில் ஆங்காங்கே ஊர் பெயர்களை சுட்டி காட்டும் வகையில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர அரசின் திட்டப் பணிகளில் வேலையின் பெயர், மதிப்பீடு, ரோடு என்ற எவ்வளவு மீட்டர் போன்ற விபரங்களை குறிப்பிட்டு பெயர் பலகைகள் வைக்கப்படுகின்றன. இதன் முக்கியத்துவம், பொது பயன்பாட்டின் அருமை தெரியாத சிலர் தங்களது சுய விளம்பர போஸ்டர்களை இவற்றின் மீது ஒட்டிவிட்டு சென்றுவிடுகின்றனர்.
இதனால் அவ்வழியே செல்லும் வெளியூர் வாகன ஓட்டிகள் பெயர் பலகை இருந்தும் விபரம் தெரிந்து கொள்ள முடியாமல் பரிதவிக்கின்றனர்.