சங்கரன்கோவில் பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின்தடை அறிவித்துள்ளது.

Update: 2024-01-18 08:18 GMT
சங்கரன்கோவில் பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நடுவக்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை 19ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பெரிய கோவிலாங்குளம், சேர்ந்தமரம், நடுவக்குறிச்சி மைனர், வேப்பங்குளம், சில்லி குளம், சூரங்குடி ஆரிய பகுதிகளில் மின்சார வினியோகம் தடை செய்யப்படும் என மின் செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News