அ.மேட்டூர் துணை மின் நிலையத்தில் மின் நிறுத்தம்

அ.மேட்டூர் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக பிப்ரவரி 5 ஆம் தேதி நாளை மின் நிறுத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-02-04 10:51 GMT

மின்நிறுத்தம்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அடுத்துள்ள அ.மேட்டூர் துணை மின்நிலையத்தில் பிப்ரவரி 5ஆம் தேதி நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் செய்யப்படும் மலையாளப்பட்டி, கொட்டாரக்குன்று, பூமிதானம், கவுண்டபாளையம் ,அ.மேட்டூர், விஜயபுரம், கடம்பூர், அரும்பாவூர், தொண்டமாந்துறை, பாலக்காடு, சீனிவாசபுரம், பெரியம்மாபாளையம், பூலாம்பாடி, கள்ளப்பட்டி ,பூஞ்சோலை ஆகிய கிராமங்களில் பிப்ரவரி 5ம் தேதி நாளை காலை காலை 9 மணிமுதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சார விநியோகம் இருக்காது என கிருஷ்ணாபுரம் துணைமின் நிலைய உதவி செயற்பொறியாளர் கலியமூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News