புலியூர், காணியாளம்பட்டி,ஒத்தக்கடையில் மின் தடை

புலியூர், காணியாளம்பட்டி, மற்றும் ஒத்தக்கடை துணை நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என மின் வாரிய பொறியாளர் கணிகை மார்த்தாள் அறிவிப்பு செய்துள்ளார்.

Update: 2024-01-19 03:57 GMT

 மின் தடை

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நாளை ஜனவரி 20ஆம் தேதி புலியூர், காணியாளம்பட்டி மற்றும் ஒத்தக்கடை பகுதிகளில் செயல்படும் 110 கேவி திறன் உடைய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை ஜனவரி 20ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார். இதனால், புலியூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட, புலியூர், எஸ்பி புதூர், மேலப்பாளையம், வடக்கு பாளையம், ஆர் என் பேட்டை, கட்டளை, பால ராஜபுரம், நத்தமேடு, மேல மாயனூர், சின்னமநாயக்கன்பட்டி, கோவில் பாளையம் ஆகிய பகுதிகளிலும், காணியாளம்பட்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட, காளியாளம்பட்டி, காளியபட்டி, வீரியப்பட்டி, சின்னாண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளிலும், ஒத்தக்கடை துணை மின் நிலைய பகுதிகளான, ஒத்தக்கடை,வடக்கு செல்லிபாளையம், கோயம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளிலும் நாளை ஜனவரி 20-ம்தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், பொதுமக்கள் முன்கூட்டியே திட்டமிட்டு, தங்களது பணிகளை முடித்துக் கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கி உள்ளார்.
Tags:    

Similar News