சிறுகனூா் பகுதியில் வரும் 30-இல் மின்தடை

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக சிறுகனூா் உள்ளிட்ட பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை (ஜன.30) மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக மின் வாரியம் அறிவித்துள்ளது.

Update: 2024-01-28 05:55 GMT

மின்தடை

சிறுகனூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை (ஜன. 30) மேற்கொள்ளப்பட உள்ளதால், ஆவார வள்ளி, சிறுகனூா் , திருப்பட்டூா், சி.ஆா்.பாளையம், எம்.ஆா். பாளையம், சன மங்கலம், மணியங்குறிச்சி, வாழையூா், நெடுங்கூா், நெய் குளம், நம்புகுறிச்சி, ஊட்டத்தூா், பி.கே.அகரம், ரெட்டி மாங்குடி, ஜி.கே. பாா்க், கொளக்குடி, கண்ணாக்குடி, புஞ்சை சங்கேந்தி, குமுளூா், மற்றும் தச்சன் குறிச்சி பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் திருவரங்க கோட்ட (பொ) செயற்பொறியாளா் ஏ. மணிகண்ட நாராயணன் தெரிவித்துள்ளாா்.
Tags:    

Similar News