பொறையார் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

மயிலாடுதுறை பொறையார் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை 12ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

Update: 2024-01-11 11:51 GMT

மின் நிறுத்தம்

தமிழ்நாடு மின்சாரவாரியம் செம்பனார்கோவில் உட்கோட்ட செயற்பொறியாளர் அப்துல்வஹாப் மரைக்காயர் விடுத்துள்ள வேண்டுகோளில் பொறையார் உபகோட்டத்தின் துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புபணிகளுக்காக நாளை (12-01-2024 )அன்று காலை 09.00 மணிமுதல் மாலை 05.00மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால், பொறையார். எருக்கட்டாஞ்சேரி, தரங்கம்பாடி, சந்திரபாடி, காட்டுச்சேரி, ஆயப்பாடி, சாத்தனூர், திரு.மணல்மேடு, சங்கரன்பந்தல், தில்லையாடி, திருவிடைக்கழி, கண்ணங்குடி, மாத்தூர், திருக்கடையூர், அனந்தமங்கலம், ஆனைக்கோயில், திருமெய்ஞானம், பிபிநல்லூர் மாணிக்கப்பங்கு. பெருமாள்பேட்டை, குட்டியாண்டியூர் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் இருக்காது மேலும் மின் நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களை பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டது.
Tags:    

Similar News