வெண்ணமலை பகுதியில் மின் நிறுத்தம்

கரூர் மாவட்டம்,வெண்ணமலையில் இன்று மின் நிறுத்தம் செய்யபடுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

Update: 2024-02-07 03:00 GMT

மின் நிறுத்தம்

கரூர் மாவட்டம், மன்மங்கலத்தில் செயல்படும் 110/33-11KV திறன் கொண்ட துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் 11 கேவி வெண்ணமலை மின் பாதையில் இன்று பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால், காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வெண்ணமலை , வெண்ணமலை பசுபதிபாளையம், ராம்நகர், பேங்க் காலனி, தீரன் சின்னமலை நகர், பெருச்சிபாளையம், குப்பச்சிபாளையம், வாங்க பாளையம், ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பொதுமக்கள் முன்கூட்டியே திட்டமிட்டு தங்களது பணிகளை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கி உள்ளனர்.

Tags:    

Similar News