கோரணப்பட்டு மற்றும் வளையமாதேவி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கடலூர் மாவட்டம், கோரணப்பட்டு, வளையமாதேவி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-18 02:48 GMT
மின்தடை
கடலூர் மாவட்டம், கோரணப்பட்டு, வளையமாதேவி துணை மின் நிலையங்களில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை கோரணப்பட்டு மற்றும் வளையமாதேவி பகுதியில் உள்ள வடக்கு வசனாங்குப்பம், தெற்கு வசனாங்குப்பம், எஸ்.புதுக்குப்பம், சிலுவைப்பாளையம், மதனகோபாலபுரம், பிள்ளைப்பாளையம், தர்மநல்லூர், ஊ.ஆதனூர் விளக்கப்பாடி, கத்தாழை, மும்முடிச் சோழகன் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை குறிஞ்சிப்பாடி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News