சுவாமிமலையில் நாளை மின்தடை

திருப்பரம்பியம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோக பகுதிகளில் நாளை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-06 05:58 GMT

மின் தடை (பைல் படம்)

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிரமான கழக கும்பகோணம் உதவி செயற்பொறியாளர் வேல்முருகன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது,,, திருப்பரம்பியம் துணை மின் நிலையத்தில் வருகின்ற 7-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் அதன் காரணமாக திருப்பரம்பியம், கொத்தங்குடி, வாழாபுரம், மேலாத்து குறிச்சி, நீலத்தநல்லூர், இணை பிரியாள் வட்டம், காவர்கூடம், உத்திரை, முத்தையாபுரம், கடிச்சம்பாடி, கல்லூர், அகராத்தூர், தேவனாஞ்சேரி, சத்தியமங்கலம், கொந்தகை, திருவைகாவூர், அண்டக்குடி, பட்டவர்த்தி, ஆதனூர், சுவாமிமலை, திம்மகுடி, மாங்குடி, புளியம்பாடி, இன்னம்பூர், மருத்துவக்குடி, நாகக்குடி, புளியஞ்சேரி, பாபுராஜபுரம், ஏரகரம், கொட்டையூர், ஜாமியா நகர், மூப்ப கோவில், வலையப்பேட்டை, திருவலஞ்சுழி, சுந்தர பெருமாள் கோவில், மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின்சாரம் இருக்காது என்பதனை தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார். 
Tags:    

Similar News