கை.களத்தூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

மாதாந்திர பராமபரிப்பு பணிகள் காரணமாக கை.களத்தூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-18 06:45 GMT

மின் நிறுத்த அறிவிப்பு

கை.களத்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக ஜனவரி-19 ம் தேதி நாளை மின் நிறுத்தம், மின்வாரிய உதவி செயற் பொறியாளர் தகவல். மின்வாரிய உதவி செயற் பொறியாளர் கலியமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கை.களத்தூர் துணை மின் நிலையத்தில் ஜனவரி-19 ம் தேதி நாளை காலை 9.00 மணி முதல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் பராமரிப்பு பணிகள் முடியும் வரை கை.களத்தூர் சிறுநிலா நெற்குணம் நூத்தப்பூர் அய்யனார்பாளையம் காரியானூர் பெருநிலா, பில்லங்குளம் வெள்ளுவாடி காந்திநகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என கிருஷ்ணாபுரம் துணைமின் நிலைய உதவி செயற் பொறியாளர் கலியமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News